மகா கவிதை அறிவுசார் போட்டி – 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்த வைரமுத்து!

தமிழ் எழுத்துலகில் முன்னணி எழுத்தாளராக இருந்து வருபவர் வைரமுத்து. இதுமட்டுமின்றி, சினிமாவில், பல்லாயிரக்கணக்கான பாடல்களையும் எழுதி உள்ளார்.

இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தான் மகா கவிதை என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன் என்றும், இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் என்ன என்பது தொடர்பாக, அறிவுசார் போட்டி ஒன்றை நடத்த உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த புத்தகத்தின் உள்ளடக்கம், ம, கா, க, வி, தை ஆகிய வார்த்தைகளில் ஒளிந்திருக்கிறது என்றும், அதனை கண்டுபிடிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை என்றும் கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்களும், தமிழ் ஆர்வலர்களும், விடையை கண்டறிய முனைப்புக் காட்டி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News