Connect with us

அடிக்கடி ரயில் விபத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை!

தமிழகம்

அடிக்கடி ரயில் விபத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை!

அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்படுவது கவலை அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு: ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ரயில்கள் மோதி நிகழ்ந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். கடந்த ஜூன் மாதம் ஒடிஸா மாநிலம், பாலசோரில் ரயில் விபத்து ஏற்பட்டு, சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் இத்தகைய விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவா்கள் விரைவில் நலம் பெற விருப்பம் தெரிவிக்கிறேன்.

பெருவாரியான இந்தியா்கள் தங்களின் பயணத்துக்காக ரயில்களையே சார்ந்திருக்கும் சூழலில், குறுகிய கால இடைவெளியில் விபத்துகள் தொடா்கதையாவது மிகுந்த கவலையளிக்கிறது. ரயில்வே பாதுகாப்பு முறைகளை உடனடியாக மத்திய அரசு ஆய்வு செய்து, மேம்படுத்தி பயணிகளின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்; அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று எனத் தெரிவித்துள்ளார்.

More in தமிழகம்

To Top