Connect with us

அமலாக்கத்துறை சம்மனுக்கு பதிலடி கொடுத்த பிரகாஷ் ராஜ்..!

இந்தியா

அமலாக்கத்துறை சம்மனுக்கு பதிலடி கொடுத்த பிரகாஷ் ராஜ்..!

பணமோசடி வழக்கில் ப்ரணவ் ஜுவல்லரி மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் இந்நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து, கடந்த 20ம் தேதி இவர்களுக்கு சொந்தமான 11 இடங்களில் சோதனை நடத்தினர்.

இதில் கணக்கில் வராத 11.60 கிலோ எடையுள்ள தங்கநகைகளும், 23.70 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறையினர் அறிவித்தனர். மேலும் பிரணவ் ஜுவல்லரி விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

நடிகர் பிரகாஷ்ராஜ், பாஜக அரசின் ஒவ்வொரு திட்டங்களையும் தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பதோடு பிரதமர் நரேந்திர மோடியையும் ஹிட்லருடன் ஒப்பிட்டும் விமர்சித்து வருகிறார். இதன் காரணமாகவே அமலாக்கத்துறை ப்ரணவ் ஜுவல்லரியுடன் சம்மந்தப்படுத்தி, இவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பதிலடி கொடுக்கும் வகையில் பிரகாஷ் ராஜ் தனது சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘பனாதி’ என்ற வார்த்தையை குறிப்பிட்டு மிரட்டுவதெல்லாம் பழங்கால யுக்தி. வேறு ஏதேனும் முயற்சி செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார்.

More in இந்தியா

To Top