சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 41 பேரும் பத்திரமாக மீட்பு

உத்தராகண்ட் மாநிலத்தில் நடந்த சுரங்கப் பாதை விபத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். 17 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணி வெற்றி பெற்றுள்ளது.

மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களிடம் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் விகே சிங் நலம் விசாரித்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இன்றைக்குத் தான் தங்களுக்கு உண்மையான தீபாவளி என தொழிலாளர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News