காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்-மு.தமிமுன் !

மயிலாடுதுறை அருகே கிளியனூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது நான்கு மாநில தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிக்கிறது. தெலுங்கானா தென்னிந்தியாவில் இருப்பதால் அங்கு மக்கள் வேறு முடிவு எடுத்துள்ளனர். இந்தி பேசும் வட மாநிலங்களில் வாழும் மக்களிடம் சிந்தனை மாற்றங்கள் ஏற்படாதவரை, இந்திய அரசியலில் மாற்றம் ஏற்படாது. தோல்விக்கான காரணம் குறித்து காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

மத்திய பிரதேசத்தில் ஆம் ஆத்மியும், சமாஜ்வாடி கட்சியும் கேட்ட சில தொகுதிகளை கொடுத்திருந்தால் அங்கு இந்த தோல்வி காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்காது. ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் களமாடியிருக்க வேண்டும். ராகுல் காந்தியின் நடைபயண உழைப்பு வீணாகியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மக்களவைத் தேர்தலுக்கான செமி ஃபைனல் தேர்தலாக இந்த தேர்தலை எதிர்கொண்ட நிலையில், இந்த தோல்வி மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையில் இந்த கூட்டணி போட்டியிடாமல், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்தால் காங்கிரஸூக்கு இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது என்றார்.

RELATED ARTICLES

Recent News