Connect with us

ஜெயலலிதாவின் நினைவு தினம்: நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

தமிழகம்

ஜெயலலிதாவின் நினைவு தினம்: நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.

இந்நிலையில், 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். உடன் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உறுதி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றது.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் அரசியல் ஆளுமை,

நம் அனைவருக்கும் தலைவியாய் வாழ்ந்து, என்றென்றைக்கும் வழிகாட்டியாய்த் திகழும் இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி “அம்மா” அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

மாண்புமிகு இதய தெய்வம், புரட்சி தலைவி அம்மா அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்துக்கு, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (05.12.23) மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம். அம்மா அவர்களின் நூற்றாண்டு கனவை நெஞ்சில் நிலைநிறுத்தி,
மக்களுக்கான ஒரே இயக்கம் அஇஅதிமுக என்பதை நம் செயலில் உறுதிப்படுத்தி, மக்கள் பணியே மகேசன் பணியாய்க் கொண்டு அயராது உழைப்போம்.

More in தமிழகம்

To Top