மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்ட மாஹூவா மொய்த்ரா! உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக பதவி வகித்து வந்தவர் மாஹூவா மொய்த்ரா.

இவர் பிரபல தொழில் அதிபர் ஹீராநந்தனிடம், பரிசுப் பொருட்களையும், பணத்தையும் பெற்றுக் கொண்டு, பிரதமர் மோடிக்கு எதிராக, மக்களவையில் கேள்விகள் கேட்டதாக புகார் எழுந்தது.

பாஜக எம்.பி. நிஷிகந்த் துபே எழுப்பிய இந்த புகாரின் பேரில், விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில், கடந்த வெள்ளிக் கிழமை அன்று, நாடாளுமன்றத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டிருந்தார்.

நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் இந்த நடவடிக்கையால், எதிர்கட்சியினர் பலர், கடும் கண்டனங்களை கூறி வந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக, மாஹூவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை, விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News