Connect with us

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய பச்சிளம் குழந்தை..!

இந்தியா

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய பச்சிளம் குழந்தை..!

ஒடிசா மாநிலம், சம்பல்பூர் மாவட்டம் லாரிபலி கிராமத்தில் பயன்படுத்தப்படாத 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று பச்சிளம் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து கிராமத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் குழந்தையை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தையை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுவரை குழந்தையை கேட்டு யாரும் வரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in இந்தியா

To Top