Connect with us

புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அறிவிப்பு..!

தமிழகம்

புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அறிவிப்பு..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி 2024-ம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் நடைபெறுகிறது.

ஜனவரி 6-ம் தேதி நடைபெற உள்ள இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டவர்கள் தொடங்கி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு சக்கர வாகனங்கள், எல்இடி டிவி, பிரிட்ஜ், கார் என பிரம்மாண்டமான பரிசுகள் வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. மாடுபிடி வீரர்களும், காளைகளும் போட்டிக்காக தயாராகி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top