Connect with us

நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்: சிறுவனை விரட்டி விரட்டி கடித்து குதறிய தெரு நாய்கள்!

இந்தியா

நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்: சிறுவனை விரட்டி விரட்டி கடித்து குதறிய தெரு நாய்கள்!

ஆந்திரா குண்டூர் நகரில் உள்ள சம்பத் நகர் சிவன் கோயில் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கார்த்திகேயா என்ற 6 வயது சிறுவனை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்து குதறின. தெரு நாய்களின் கொடூர தாக்குதலால் பயந்து போன சிறுவன் சப்தம் போட்டு கதறி அழுதுள்ளார்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர், சிறுவனைத் தாக்கிய நாய்களை விரட்டிவிட்டனார்.

பின்னர் பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக உறவினர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் சொந்த ஊர் ஹைதராபாத் என்றும் குண்டூரில் இருக்கும் உறவினர்கள் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் தாக்குதலுக்கு அந்த சிறுவன் ஆளானதாக தெரியவந்துள்ளது.

More in இந்தியா

To Top