Connect with us

வரைமுறையை மீறும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி! – தமிழிசை காட்டம்!

தமிழகம்

வரைமுறையை மீறும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி! – தமிழிசை காட்டம்!

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன். இவரை பொதுமக்கள் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “மத்திய அரசும் மாநில அரசு இணைந்து புதுச்சேரி மக்கள் 2024-ல் மகிழ்ச்சியாக வாழ அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றும் என்றார். எல்லா விதத்திலும் வளர்ச்சியடைந்த நாடாக நாம் மாறி வருகிறோம் என்பதை ஒப்புக் கொள்ளதான் வேண்டும்” என்றார்.

பின்னர், ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு, “ஹாப்பி ஸ்ட்ரீட் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அது வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. இந்நிழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். கொண்டாட்டம் எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.

அதை காவல்துறைக்கும் அரசுக்கும் தெரிவிப்பேன். கொண்டாட்டங்கள் திண்டாட்டங்களாக மாறி வரக்கூடாது. இதில் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

More in தமிழகம்

To Top