ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…டெல்லியில் லேசான அதிர்வு

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இதன் காரணமாக தலைநகர் டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டில் உள்ள பொருட்கள் அதிர்ந்தன. இதனால், டெல்லி உள்பட பல்வேறு வட இந்திய நகரங்களில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

RELATED ARTICLES

Recent News