Connect with us

பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு உதவும் இஸ்லாமியர்கள்..!

தமிழகம்

பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு உதவும் இஸ்லாமியர்கள்..!

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அண்ணா நகரில் குதுபுதியன் தர்கா வளாகத்தில் இஸ்லாமியர்கள் சார்பில் அவ்வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வாட்டர் பாட்டில், ஜூஸ், பிஸ்கட் வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி, செல்போன் சார்ஜ் செய்வதற்காக பிளக் பாயிண்ட் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் நடந்து செல்வதால் கால் வலிக்குண்டான மருந்துகளை வழங்கியதோடு இளைப்பார சாமியானா பந்தல் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளப்பட்டியை சேர்ந்த இஸ்லாமியர்களால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நிகழ்வால் சமூக ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் அப்பகுதியில் பேணிப் பாதுகாக்கப்படுகிறது.

More in தமிழகம்

To Top