Connect with us

Raj News Tamil

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி வீரர் உயிரிழப்பு!

விளையாட்டு

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி வீரர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி வீரர் செப்டெய்ன் ரஹர்ஜா (35) உயிரிழந்தனர்.

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் சனிக் கிழமை (பிப்.10) அன்று மாலை கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா மீது எதிர்பாராதவிதமாக மின்னல் பாய்ந்தது.

மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த செப்டெய்ன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்.

மோசமான வானிலை காரணமாக வானம் கருமேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், மைதானத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் மின்னல் தோன்றியதால், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top