அண்ணே, அது கேளம்பாக்கம் இல்ல, கிளாம்பாக்கம் – செல்லூர் ராஜுவால் அவையில் சிரிப்பலை

சட்டபையில் இன்று கேள்வி நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ, கிளாம்பாக்கத்தில் தென் மாவட்ட பயணிகள் அவதிக்கு உள்ளாவது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர் கிளாம்பாக்கம் என்று கூறுவதற்கு பதிலாக கேளம்பாக்கம் என கூறியுள்ளார்.

அருகில் இருந்த உறுப்பினர்கள் இதனை கவனித்து அண்ணே அது கிளாம்பாக்கம் என கூறியுள்ளனர். ஆனால் செல்லூர் ராஜு அதனை கவனிக்காமல் தொடர்ந்து பேசியுள்ளார்.

இதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், செல்லூர் ராஜூ அண்ணே, அது கேளம்பாக்கம் இல்ல, கிளாம்பாக்கம் என கூறினார். உங்கள் மகிழ்ச்சி. எங்கள் மகிழ்ச்சி. அங்கே குழப்பம் இல்லை.,உங்களுக்கு தான் குழப்பம் இருக்கிறது. வேண்டுமானால் வாருங்கள், உங்களை அழைத்து செல்கிறேன் என்று பேசிய போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

RELATED ARTICLES

Recent News