விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், நடிகர் விஜய் உடன், வைபவ்வும் இணைந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வைபவ் நடித்துள்ள ரணம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, விஜய் அரசியலுக்கு வருவது குறித்தும், அதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், நான் விஜய் அண்ணாவிடம் இதுகுறித்து கேள்வி கேட்டால், அவர் என்னை செவுலில் அறைந்துவிடுவார் என்று கூறினார்.
மேலும், கோட் படத்தின் ஷீட்டிங்கிற்கு செல்லும்போது, இந்த கேள்வியை விஜய் அண்ணாவிடம் கேட்கிறேன் என்றும் அவர் கூறினார்.