இதனால் தான் விஜயதரணி பாஜகவில் இணைந்திருப்பார் – சீமான் கருத்து

கன்னியாகுமரி எம்.பி சீட் வழங்கப்படாமல் இருந்ததில் கடந்த சில தினங்களாகவே அதிருப்தியில் இருந்தார் விஜயதரணி விரைவில் பாஜகவில் இணைவார் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் விஜயதரணி நேற்று திடீரென டெல்லியில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்று, தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது : காங்கிரஸ் கட்சி இனி இருக்காது. அதனால் பாஜகவிற்கு செல்லலாம் என்கிற நினைப்பில் விஜயதரணி அங்கு சென்றிருக்கலாம் என கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியாவது அவருக்கு 3 முறை எம்.எல்.ஏ சீட் வழங்கியது. ஆனால், பாஜகவில் சேரும்போது மட்டும்தான் ஏதாவது செய்வார்கள். அதன் பின் எந்த செய்தியும் வராது என அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News