ரோந்து பணியில் இருந்த காவலரிடம் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்!

ஆவடியில் ரோந்து பணியில் இருந்த காவலரிடம் மர்ம நபர்கள் பட்டாகத்தியை காட்டி இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய குற்ற பிரிவில் தலைமை காவலர்களாக இருப்பவர்கள் சந்திரசேகர், கணேசன் இருவரும் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆவடி செங்குன்றம் சாலையில் இரும்பு கம்பி ஏற்றுக்கொண்டு வந்த லோடு வேன் ஒன்றை மடக்கி உள்ளனர் ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றதால் இருவரும் இரு சக்கர வாகனத்தில் லோடு வண்டியை துரத்தி சென்று மடக்கியுள்ளனர்.

அப்போது லோடி வண்டியில் இந்தியில் பேசியப்படி இறங்கிய 2 மர்ம நபர்கள் பட்டா கத்தியை கொண்டு காவலர்களை மிரட்டி காவலர்கள் வந்த இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லோடு வண்டி திருட்டு வண்டியா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலரிடம் திருடி சென்ற இருசக்கர வாகனத்தை சோழவரத்தில் விட்டுட்டு தப்பி சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற வட மாநில மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News