நோன்பு கஞ்சியோடு தெரியாமல் பல் செட்டையும் விழுங்கிய 93 வயது மூதாட்டி

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 93 வயதான மூதாட்டி ரஷியா பேகம் என்பவர், கடந்த புதன் கிழமை அன்று மாலை ரமலான் நோன்பை முடித்துக்கொண்டு நோன்பு கஞ்சி குடித்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த பல்செட்டும் நோன்பு கஞ்சியோடு சென்று உணவுக்குழாயில் சிக்கியுள்ளது.

வலியால் துடிதுடித்துப் போன அம்மூதாட்டியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். உடனடியாக அவரை அங்கிருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு மூதாட்டியின் உணவு குழாயில் சிக்கி கொண்டிருந்த பல் செட்டை, உள் நோக்கி கருவி மூலம் லாவகமாக எடுத்தனர். சுமார் 4 மணி நேர மருத்துவர்கள் மேற்கொண்ட தொடர் சிகிச்சையால் மூதாட்டி குணமடைந்து வருகிறார். இதையடுத்து, மருத்துவக் குழுவினருக்கு மூதாட்டியின் குடும்பத்தார் நன்றி தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News