திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு 9 முறை சம்மன் அனுப்பியபோதும், நேரில் ஆஜராகவில்லை.

இதையடுத்து அவர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து வந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

கேஜரிவாலை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்த நிலையில், ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News