முடங்கிய இன்ஸ்டாகிராம்.. பதறிய ரசிகர்கள்.. ட்விட்டரில் வந்த யுவன்.. நடந்தது என்ன?

செல்வராகவன், ராம், வெங்கட் பிரபு, விஷ்னு வர்தன், அமீர், தியாகராஜன் குமாரராஜா, பி.எஸ்.மித்ரன் என்று பல்வேறு முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து, பல்வேறு வெற்றிப் பாடல்களை கொடுத்தவர் யுவன் சங்கர் ராஜா.

இவர் தற்போது விஜயின் தி கோட் படத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், யுவன் இசையமைத்த தி கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கில் பாடலான விசில் போடு, சமீபத்தில் வெளியானது.

வெளியான சில மணி நேரங்களிலேயே, ட்விட்டரில் டிரெண்டான இந்த பாடல், கலவையான விமர்சனங்களையே தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இவ்வாறு இருக்க, யுவன் சங்கர் ராஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை, Deactivate செய்ததாக கூறப்பட்டது.

இதனால், பல்வேறு ரசிகர்கள், காரணம் புரியாமல் குழம்பித் தவித்தனர். ஒருசிலர், தி கோட் படத்தின் பாடல் சொதப்பியதால் தான், அவர் இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறிவிட்டார் என்றும், வதந்திகளை கிளப்பி வந்தனர்.

ஆனால், பல்வேற யூகங்களுக்கு மத்தியில், தற்போது, யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில், பதிவு ஒன்றை கூறி, விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது, தனது எக்ஸ் தளத்தில், “உங்களது அக்கறையான மெசேஜ்களுக்கு நன்றி. இது வெறும் தொழில்நுட்ப கோளாறு தான். என்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை மீண்டும் கொண்டு வருவதற்கு, என்னுடைய அணி முயற்சி செய்து வருகிறது. நான் சீக்கிரம் வந்துவிடுவேன்.” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News