அஜித் வாக்கு செலுத்தும்போது நடந்த பிரச்சனை! கடுப்பான முதியவர்!

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், தன்னுடைய வாக்கை, நடிகர் அஜித் முதல் ஆளாக நேற்று செலுத்தியிருந்தார்.

ஆனால், நேற்று வாக்கு செலுத்தும்போது, சிறிய சலசலப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகர் அஜித்துக்கு முன்பே, வாக்கு செலுத்துவதற்கு முதியவர் ஒருவர் காத்திருந்தாராம். ஆனால், அந்த முதியவருக்கு முன்பாக, நடிகர் அஜித்தை அழைத்து, பூத் அதிகாரிகள் வாக்கு செலுத்த கூறியுள்ளனர்.

இதனால், அந்த முதியவர் கடுங்கோபம் அடைந்துள்ளாராம். இதன்காரணமாக, அந்த சமயத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டதாக, சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News