தூக்கிவிட்டவருக்கு NO சொன்ன எஸ்.கே? இதுதான் சினிமா!

உண்மையான குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை எடுத்தவர் இயக்குநர் பாண்டிராஜ்.

பசங்க, வம்சம், கடைக்குட்டி சிங்கம் என்று பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த இவர், கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற படத்தை எடுத்திருந்தார்.

ஆனால், ரசிகர்களிடம் வரவேற்பை பெறாத இப்படம், தோல்வி அடைந்தது. எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் ஆகி, இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும், வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இவர், சிவகார்த்திகேயன், விஷால் ஆகியோரை நாடி, கதை கூறியுள்ளார்.

ஆனால், அவர்களும் கைவிரித்ததால், தற்போது நடிகர் விஜய்சேதுபதியை வைத்து, புதிய படம் ஒன்றை எடுக்க உள்ளார். இப்படத்தை, லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

RELATED ARTICLES

Recent News