“ரஜினியை கலாய்த்த வெங்கட் பிரபு” – நடந்தது என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருந்தது.

ஆனால், இந்த டீசரை , நடிகர் கார்த்திக் குமார் கலாய்த்து, வீடியோ வெளியிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், கார்த்திக் குமாரின் வீடியோவை இயக்குநர் வெங்கட் பிரபு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதன்மூலம், வெங்கட் பிரபுவும், ரஜினியின் கூலி டீசரை கலாய்த்ததாக, இணையத்தில் கிசுகிசு எழுந்தது. இந்த கிசுகிசுவுக்கு வெங்கட் பிரபு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இது கமர்சியல் படம் எடுக்கும் எங்களை பற்றியது தான். கார்த்திக் குமார் சொல்வதும் ஒரு விதத்தில் உண்மை தான் என்று தெரிவித்தார்.

மேலும், புதுவிதமாக ஏதாவது முயற்சித்தால், அதனை ஏற்றுக் கொள்ள ரசிகர்கள் தயாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்மூலம், அந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News