“புத்தி கெட்டு திரிந்தால் தான்.. புத்தி வரும்” – அட்வைஸ் சொன்ன செல்வராகவன்!

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என்று பல்வேறு கல்ட் கிளாசிக் படங்களை கொடுத்தவர் செல்வராகவன்.

தற்போது திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “ஐயோ ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள் !

புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் ! இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். இவரது இந்த தத்துவம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

RELATED ARTICLES

Recent News