அமைதி, அமைதி.. அமைதியோ அமைதி.. – பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்தி!

ஜே.டி.எஸ். கட்சியின் எம்.பியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ, சமீபத்தில் இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று ரேவண்ணா கூறியிருந்த நிலையில், தற்போது திடீரென தலைமறைவு ஆகியுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்த சம்பவம் குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார்.

அவர் பேசியிருப்பது பின்வருமாறு:-

“கர்நாடகாவில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடூரமான சம்பவம் பற்றி பேசாமல், பிரதமர் நரேந்திர மோடி வழக்கம்போல் அமைதி காத்து வருகிறார்.

வாக்கு பெற வேண்டும் என்பதற்காக, ரேவண்ணாவை பற்றி அனைத்தும் தெரிந்த பிறகும், 100-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டிய ஒரு கொடூரனுக்காக, பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு, பிரதமர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், “எப்படி, இவ்வளவு எளிமையாக, ஒரு மிகப்பெரிய குற்றவாளி நாட்டில் இருந்து தப்பிக்க முடியும்” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “கைசர்காஞ்சில் இருந்து கர்நாடகா வரை, உன்னாவில் இருந்து உத்தரகாண்ட் வரை, பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டியவர்களுக்கு பிரதமர் சைலன்டாக ஆதரவு அளித்து வருகிறார். இது, நாடு முழுவதும் உள்ள குற்றவாளிகளின் மனஉறுதியை அதிகரிக்கும்” என்றும் விமர்சித்தார்.

RELATED ARTICLES

Recent News