விஜயின் வளர்ச்சிக்கு உதவிய ஒரு பழக்கம்! அதனால் தான் அவர் தளபதியா?

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுவர் தளபதி விஜய். ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்த இவர், தற்போது இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் என்றால், அது அவரது கடின உழைப்பால் தான்.

இவ்வாறு இருக்க, விஜயின் வளர்ச்சிக்கு உதவிய, இன்னொரு நல்ல பழக்கம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, சினிமாவில் என்ன தான் சிறப்பாக நடித்தாலும், நமக்கு பொருத்தமான நல்ல கதையை தேர்ந்தெடுத்தால் தான் ஜொலிக்க முடியும்.

கதை தேர்வு செய்வதில் சொதப்புவதாலே, பல்வேறு சிறந்த நடிகர்கள் ஹீரோ அந்தஸ்தை இழந்திருக்கிறார்கள். ஆனால், கதை தேர்வு செய்வதில் நடிகர் விஜய் வல்லவர் என்று கூறப்படுகிறது.

அதற்கு காரணம் என்னவென்றால், அவர் எப்போது கதையை கேட்டாலும், முழு ஸ்கிரிப்டையும் தான் கேட்பாராம்.

அது 3 மணி நேரமாக இருந்தாலும், ஒரே இடத்தில் அமர்ந்து, மொத்த கதையையும் கேட்டு முடிப்பாராம். இதனால் தான் அவர் தளபதியாக இருக்கிறார்…,

RELATED ARTICLES

Recent News