வாக்காளர் கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ; திரும்பி அறைவிட்ட வாக்காளர்: வீடியோ வைரல்!

ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினரான சிவகுமார் இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு போட்டியிடுகிறார்.

இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் தெனாலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடி ஒன்றுக்கு சென்ற சிவகுமாருக்கும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது வாக்கு சாவடியில் நின்று கொண்டிருந்த எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படும் வாக்காளர் ஒருவரின் கன்னத்தில் சிவக்குமார் பளார் என்று அறைந்தார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த வாக்காளர் சட்டமன்ற உறுப்பினர் என்றும் பாராமல் அதே பளாரை அவருக்கு திருப்பி கொடுத்தார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சட்டமன்ற உறுப்பினருடன் சென்று இருந்த அவருடைய ஆதரவாளர்கள் அந்த வாக்காளரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை விலக்கிவிட்டு சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News