ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல்…தேதி அறிவிப்பு

ஈரானின் அதிபராக இப்ராஹிம் ரைசி 2021ல் பதவியேற்றார். இவர் நேற்று முன்தினம் ஈரான் – அஜர்பைஜான் எல்லையில் கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக, ஹெலிகாப்டரில் பயணம் செய்தார்.

அப்போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி உட்பட அதில் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிர் அப்தொலஹின் உள்ளிட்டோரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து ஈரான் அரசியலமைப்பு சட்டத்தின்படி, முதல் துணை அதிபரான முகமது மோஹ்பைர், இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூன் 28ல் நடத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News