ஆர்சிபி அணி போல பாஜக தோற்றுக் கொண்டே இருக்கும் – அதிமுக ஜெயக்குமார் விமர்சனம்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி தோல்வியை தழுவியது.

கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் தோல்வி அடைந்தார். தோல்விக்கு பின் அதிமுக தலைவர் எஸ்.பி வேலுமணி, “பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டிருந்தால் 35 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி இடையே உள்கட்சி பிரச்சனை இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்தார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது : ஸ்பி வேலுமணி பேசியது அதிமுகவின் கருத்து அல்ல. பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்பதுதான் அதிமுக-வின் நிலைப்பாடு. அண்ணாமலை புள்ளி ராஜாவாகிவிட்டார். அந்த கட்சி எவ்வளவு? இந்த கட்சி எவ்வளவு? என புள்ளி விவரங்கள் எடுக்கும் ஐபிஎஸ் அதிகாரியாகதான் செயல்பட்டார்.

தமிழகத்தில் பாஜக ஆர்சிபி அணி போன்றது. தோற்றுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். நாங்கள் சிஎஸ்கே. 30 ஆண்டுகள் வெற்றிகளை குவித்தோம். வரவிருக்கும் தேர்தலில் சாதனைகள் குவிக்கப் போகிறோம் என அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News