ஜஸ்புரீத் பும்ரா ஒரு மேதை: ரோஹித் சர்மா!

ஜஸ்புரீத் பும்ரா ஒரு மேதை, இதை நாம் அனைவரும் அறிவோம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: ஜஸ்புரீத் பும்ரா தனது பலத்தை கொண்டுசெயல்படுகிறார். அவரால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால் அவரை பற்றி அதிகம்பேசவிரும்பவில்லை. இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் அவர், இதே மனநிலையுடன் இருக்க விரும்புகிறேன். அவர், ஒரு மேதை, இதை நாம் அனைவரும் அறிவோம்.

இதுபோன்ற ஒரு பந்து வீச்சு வரிசையால் நம்பிக்கையுடன் செயல்பட முடியும். பாகிஸ்தான் அணி பேட்டிங்கின் போது பாதியிலேயே, நாங்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஆலோசித்தோம். அப்போது பேட்டிங்கில் நமக்கு நிகழ்ந்தது அவர்களுக்கும் நிகழும் என்று கூறினேன். நாங்கள் பேட்டிங்கில் போதுமான அளவு சிறப்பாக செயல்படவில்லை.

எங்களுடைய இன்னிங்ஸின் பாதியில் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் அதன் பிறகு போதிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. இதனால் ரன்கள் குறைவாகவே சேர்த்தோம். இவ்வாறு ரோஹித் கூறினார்.

RELATED ARTICLES

Recent News