ஆட்டோகாரரிடம் சண்டை போட்ட நயன்தாரா? குவியும் புகார்!

சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தான், நடிகை நயன்தாரா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மாலை நேரங்களில், தனது இரண்டு குழந்தைகளையும், குடியிருப்பின் கீழ் பகுதியில் உள்ள வளாகத்தில், நயன்தாரா விளையாட வைப்பாராம்.

அவ்வாறு விளையாட வைக்கும்போது, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, சிறிய விஷயங்களுக்கே, பிறரிடம் நயன்தாரா கோபப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே, வேகமாக வாகனத்தை இயக்கிய ஆட்டோ ஓட்டுநரிடம், நயன்தாரா சண்டை போட்டுள்ளாராம். இதுதொடர்பான தகவல், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News