பெற்ற குழந்தையை கொன்ற தாய் கைது!

கர்நாடக மாநிலத்தில் சிக்கலசந்திரா அருகே மஞ்சுநாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் வெங்கடேஷ். இவரது மனைவி ரம்யா (35). இவர்கள் இருவரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் ஆவர்கள். இவர்களுக்கு 4 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில் ரம்யா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தனது 4 வயது பெண் குழந்தை பிரதிகாவின் கழுத்தை நெரித்து ரம்யா கொலை செய்துள்ளார்.

இதையடுத்து, அவர் தனது மைத்துனரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, குழந்தையை கொன்றுவிட்டதாக ரம்யா தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி காவல் நிலையத்தில் ரம்யா மீது புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவை கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது, குழந்தையை கொன்றது குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

அதாவது வெங்கடேஷ், ரம்யா தம்பதிக்கு பிறந்துள்ள இரட்டை பெண் குழந்தைகளில் ஒன்று நல்ல உடல் நலத்துடன் இருப்பதால், தற்போது அந்த குழந்தை பள்ளிக்கு சென்று வருகிறது. ஆனால் மற்றொரு குழந்தை பிரதிகா வாய் பேச முடியாமலும், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த குழந்தையை வளர்க்க ரம்யா மிகவும் சிரமப்பட்டுள்ளார். அத்துடன் குழந்தைக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மனம் உடைந்த ரம்யா நேற்று முன்தினம் குழந்தை பிரதிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அதையடுத்து கைதான ரம்யாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News