தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்வு பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கடந்த சில தினங்களாக ஆந்திரா கர்நாடக உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து உள்ளாதால் மொத்த விற்பனை சந்தையில் தக்காளி விலை கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி மட்டுமின்றி பீன்ஸ் சின்ன வெங்காயம், பீட்ரூட், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிகுள்ளாகி உள்ளனர்.
இனி வரும் நாட்களில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை மேலும் உச்சத்தை அடையாமல் அவற்றை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், பண்ணை பசுமை கடைகளின் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.