சென்னை மயிலாப்பூரில் சமையல் எண்ணெய் கேனில் எலி இறந்து கிடந்ததை கவனிக்காததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூர் கணேசபுரத்தில் சின்னக் குழந்தை(88) என்ற மூதாட்டியின் பிள்ளைகள், பேர பிள்ளைகள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று வந்துள்ளார்கள்.
கடந்த 10 நாட்களாக வீட்டில் இருந்த (சமையல் எண்ணெய்) ஆயிலில் சமைத்து சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு சமையலுக்கு பயன்படுத்திய ஆயிலில் சிறிய எலி விழுந்து அழுகிய நிலையில் இருந்துள்ளது.
இதனை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது சிலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூதாட்டி சின்னக் குழந்தை, அவரது குடும்ப உறுப்பினர்கள் ஹேமந்த் ஸ்ரீஹேமந்த்சாய், மணிகண்டன்,பிரிய விமலா,சரண், விமல்ராஜ் ஆகிய எட்டு பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன.
விஷமுறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நான்கு பேர் வீடு திரும்பியுள்ளனர் மற்ற நான்கு பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.