எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே 18 பேரை செய்தனர்.
மேலும், மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.