விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை குடித்த உள்ளூரைச் சேர்ந்த 65 ஜெயராமன் (65) மற்றும் 2 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் ஜெயராமன் இன்று (ஜூலை 4) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் காலை 10 மணிக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.