இளைஞரை கடித்த பாம்பு.. பதிலுக்கு பாம்பை இரண்டு முறை கடித்த இளைஞர்.. பரபரப்பு சம்பவம்..

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள ராஜௌலி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் லோகர். 35 வயதாகும் இவர், ராஜௌலி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில், ரயில்வே பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அன்று, இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, உறங்கியுள்ளார். அப்போது, அவரை விஷப் பாம்பு ஒன்று கொத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ், அந்த பாம்பை தனது கையில் பிடித்து, இரண்டு முறை கடித்துள்ளார்.

அதாவது, ஒரு பாம்பு தங்களை கொத்திவிட்டால், அதனை இரண்டு முறை பதிலுக்கு நாம் கடித்துவிட்டோம் என்றால், விஷம் முரிந்துவிடும் என்பது அந்த பகுதி உள்ளூர் மக்களின் மரபாக இருந்து வருகிறது.

இதனை உண்மை என்று நம்பிய சந்தோஷூம், பாம்பை இரண்டு முறை கடித்துள்ளார். அதில் அந்த பாம்பு இறந்துவிட்டது.

இதையடுத்து, சந்தோஷை மீட்டு அவரது சக பணியாளர்கள், அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது பூரண நலமாகி இருக்கிறார்.

RELATED ARTICLES

Recent News