ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக நிர்வாகி கைது..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், தனது வீட்டின் முன்பாக மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாகவே இதுபோன்ற கொலை சம்பவம் அரங்கேறி இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்தனர். அதில், கடந்த ஆண்டு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சுரேஷின் சகோதரரான பாலுவும் சரண் அடைந்துள்ளார்.

இதில் கைதான 8 பேரில் பாஜகவின் எஸ்.சி, எஸ்.டி. பிரிவு திருநின்றவூர் மண்டலத் தலைவர் செல்வராஜூம் ஒருவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

RELATED ARTICLES

Recent News