சினிமாவில் இருந்து விலகும் மாரியம்மா! ஏன் தெரியுமா?

போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துஷாரா விஜயன். இந்த படத்திற்கு பிறகு, சார்பட்டா பரம்பரை படத்தில், மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, பெரும் பிரபலம் அடைந்தார்.

இதையடுத்து, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும், இவர் நடித்துள்ள ராயன், வேட்டையன், வீர தீர சூரன் ஆகிய படங்கள், ரிலீஸ்-க்கு காத்திருக்கின்றன.

இந்நிலையில், நடிகை துஷாரா விஜயன், செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், என்னுடைய 35 வயதில் திரையுலகில் இருந்து விலகிவிடுவேன் என்றும், அதன்பிறகு நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், 35 வயதுக்கு பிறகு, சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்றும், அதுதான் தன்னுடைய விருப்பம் என்றும், அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News