மைக்ரோசாஃப்ட் பிரச்சனை : விமான நிலையங்களில் கைகளால் எழுதப்படும் போர்டிங் பாஸ்

புதிதாக அப்டேட் செய்யப்பட்ட கணினியில் ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் ஏற்பட்டுள்ளதால், பெங்களூருவில் இன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் துறைகளில் பெரும் பாதிப்பு ஏறப்ட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் முடங்கியிருப்பதால், சென்னை விமான நிலையத்தின் கணினி சர்வர்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 27 விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சில விமான நிலையங்களில், பயணிகளுக்கு கைகளால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ் வழங்கப்பட்டு விமானத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கைகளால் போர்டிங் பாஸ்கள் எழுதப்படுவதால் பல மணி நேரம் விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News