அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட நோயாளி..!!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்தவர் செல்வம் (62). இவர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு காலில் புண் ஏற்பட்டு அதற்கு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆண்கள் அறுவை சிகிச்சை அரங்கம் அமைந்துள்ள பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க, காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்க்கரை நோயினால் காலில் ஏற்பட்ட புண்ணின் அவதியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா.? அல்லது வேறு ஏதும் காரணமா.? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News