கோலாகலமாகத் தொடங்கிய ஒலிம்பிக்!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியது.

வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

பாரிஸ் நகரின் முக்கிய அடையாளமான சீன் நதியில் பிரம்மாண்டமாக தொடக்க விழா அணி வகுப்பு நடைபெற்றது.

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் திறந்த வெளியில் நடைபெற்றது.

சுமார் 100 படகுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அந்தந்த நாடுகளின் கொடியை ஏந்தியபடி 6 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்துச் சென்றனர். இந்திய அணி வகுப்பில் தேசியக் கொடியை டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து ஆகியோர் ஏந்திச் சென்றனர்.

தொடக்க விழாவை தொடர்ந்து இன்று முதல் போட்டிகள் ஆரம்பமாகின்றன. பாட்மிண்டனில் இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் 14-ம் நிலை வீரரான இந்தியாவின் லக் ஷயா சென், 41-ம் நிலை வீரரானகவுதமாலாவின் கெவின் கோர்டானுடன் மோதுகிறார்.

RELATED ARTICLES

Recent News