மீனவருக்கு அதிர்ஷ்டம்: கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீன்!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிபட்டினம் கடற்கரையில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் வீசிய வலையில் அதிக எடையுள்ள ஏதோ ஒன்று வலையில் சிக்கி உள்ளது தெரிய வந்தது.

தொடர்ந்து வலையை கரைக்கு இழுத்து வந்த அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒன்னரை டன் எடை கொண்ட தேக்கு மீன் சிக்கி உள்ளது தெரிய வந்தது.

தொடர்ந்து கரைக்கு எடுத்து வர சிரமப்பட்ட அவர்கள் கிரேன் உதவியுடன் அந்த மீனை கரைக்கு இழுத்து வந்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்த சென்னையை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் அந்த மீனவரிடம் சென்று நான்கு லட்ச ரூபாய் கொடுத்து அந்த மீனை வாங்கிச் சென்றதாக தெரியவந்துள்ளது.

தேக்கு மீன் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News