சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து ஐந்தே நாட்களான ஆண் குழந்தை மாஸ் கனிந்த பின் அரசு மருத்துவமனையில் இருந்து திருடி சென்ற நிலையில் தனிப்படை காவல்துறையினர் குழந்தை மற்றும் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்துள்ளனர்.
குழந்தையை கடத்திச் சென்ற பெண் சேலம் வாழப்பாடி அருகே உள்ள காரிப்பட்டி நேரு நகர் சேர்ந்த வினோதினி என்பதும் பெண்ணுக்கு குழந்தை இல்லாததால் மருத்துவமனையில் இருந்து குழந்தை திருடி சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தையை கடத்திச் சென்ற வினோதினி அரசு மருத்துவமனைக்கு குழந்தைகயை சிகிச்சைக்காக கொண்டு வரும்பொழுது காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.