சினிமா
புது-வீட்டில் பால் காய்ச்சி கொண்டாடிய ஜிபி.முத்து..!
டிக்டாக் செயலி மூலம் வீடியோ பதிவிட்டு பிரபலமானவர் ஜிபி.முத்து. செத்த பயலே நாரப்பயலே என வசனங்கள் பேசி சிரிக்க வைத்த இவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
முதல் ஆளாக பங்கேற்ற ஜிபி.முத்து சில நாட்களிலே வீட்டு ஞாபகத்தால் அங்கிருந்து வெளியேறினார். இந்த நிலையில் தனது சொந்த கிராமத்தில் புதுவீடு கட்டியுள்ள இவர், மனைவி, மகன்கள் என மிக எளியமையாக பால் காய்ச்சி குடிபுகுந்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
You must be logged in to post a comment Login