எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு தங்கு கடல் மீன்பிடி விசைப்படகையும் அதிலிருந்த 11 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் வைத்து கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் முதல் கட்ட விசாரணை செய்த பின் மீனவர்கள் அனைவரும் நாளை காலை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.