அம்பத்தூர் காவல் நிலையத்தில் தீ விபத்து!

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக வைக்கப்பட்ட பொதுமக்களுடைய வாகனங்கள் இருக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தால் பொதுமக்களுடைய இரண்டு இருசக்கர வாகனங்கள் தீயில் முற்றிலுமாக எரிந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

RELATED ARTICLES

Recent News