பேஜர், வாக்கி டாக்கி எடுத்துச் செல்ல தடை: எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

லெபனானில் நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து தங்களது நிறுவன விமானங்களில் பயணிக்கும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் எடுத்துச் செல்ல எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது.

சில நாள்களுக்கு முன்பு லெபனான் மற்றும் சிரியாவில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் போன்ற தொலை தொடர்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 37 பேர் உயிரிழந்து 3,000 பேர் வரை காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், “தடை செய்யப்பட்ட இந்தப் பொருள்கள் பயணிகளின் கைப்பைகள், உடைமைகளில் இருப்பது கண்டறியப்பட்டால் அவை துபை காவல்துறையால் பறிமுதல் செய்யப்படும்” என்றும் கூறியுள்ளது.

RELATED ARTICLES

Recent News