சூர்யாவை சந்தோஷப்படுத்திய கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 44-வது திரைப்படத்தில், நடிகர் சூர்யா நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு, நேற்று முடிவடைந்தது. இதுதொடர்பான அறிவிப்பை, படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த திரைப்படக்குழுவினர் குறித்து, சூர்யா கூறியுள்ளதாக சொல்லப்படும் தகவல், இணையத்தில் பரவி வருகிறது.

அதாவது, சமீப காலங்களாக, நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படங்களில், பல்வேறு சர்ச்சைகள் நடந்து வருகிறது. வணங்கான் பாதி படப்பிடிப்பு நடத்தப்பட்டு டிராப் ஆனது, புறநானூறு படம் தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது என்று தொடர் பிரச்சனைகளை சூர்யா சந்தித்து வந்தார்.

ஆனால், சூர்யா 44 திரைப்படம் தான், சொன்ன தேதியில் ஆரம்பிக்கப்பட்டு, சொன்ன தேதியில் முடிக்கப்பட்டதாம். இதனால், சூர்யா மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News